உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உள்ளுகு-றுக்கை அருகே பாவாடரப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 62, விவசாயி; நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வீட்டின் அருகே-யுள்ள தன் நிலத்திற்கு சென்றார். அவரது நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி தாக்கியதில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். அவருக்கு கோவிந்தம்மாள், 53, என்ற மனைவியும், செல்வி, 35, என்ற மகளும், பசவராஜ், 32, என்ற மகனும் உள்ளனர். ராயக்-கோட்டை வனத்துறையினர், உயிரிழந்த முனியப்பன் குடும்பத்-திற்கு முதற்கட்டமாக, 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்கினர். மேலும், 9.50 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி