உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ ரூ.1.50 லட்சம் மதிப்பில் சேதம்

மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் தீ ரூ.1.50 லட்சம் மதிப்பில் சேதம்

சேலம், சேலம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த, சுரேஷ்குமார் மனைவி சொர்ணலதா, 39. அதே பகுதியில் மெத்தை தலையணை தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். அங்கு நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு தீப்பற்றியது. மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதில், பஞ்சு மெத்தை தயாரிப்பு பொருட்கள், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் விபத்து எற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை