உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

குடம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

ஆத்துார், ஆத்துார், பைத்துார் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 40. அதே பகுதியில், பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அங்கு பிளாஸ்டிக், பழைய பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியே வைத்திருந்தார். நேற்று காலை, 6:50 மணிக்கு, ஆலையில் தீப்பற்றி எரிந்தது.மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு துறையினர், 7:30 மணிக்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை