உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்

சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்

சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்சேலம், நவ. 3-ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள், வளர்பிறை பிரதமையில் தொடங்கி சஷ்டி வரை, 6 நாள் விரதமிருந்து வழிபடுவது கந்தசஷ்டி. அதை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியர் கோவில் நடை நேற்று காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் சுப்ரமணியர் சமேத வள்ளி, தெய்வானைக்கு மூல மந்திர ேஹாமம் நடந்தது. தொடர்ந்து மகா அபிேஷகம் முடிந்து வெள்ளி காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள், விருச்சிக லக்னத்தில் சூரசம்ஹார உற்சவ கொடியேற்று விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்க கந்தனை வழிபட்டனர். பின், உற்சவர் சண்முக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாரிமுத்து தெரு, பண்டரி நாதர் தெரு, திரு.வி.க., பாதை உள்பட மாட வீதிகளில் வலம் வந்து, பின் கோவிலை அடைந்தார். அப்போது வீதியில் திரண்டிருந்த பக்தர்கள், சண்முகனை வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம் செய்து யாகசால பூஜை, சத்ரு சம்ஹார திரிசரி ேஹாமம் நடந்தது. அதேபோல், 7 வரை நடக்கிறது. இன்று காலை, 8:00 மணிக்கு அன்னபட்ச வாகனத்திலும், 4ல் குதிரை வாகனம், 5ல் சிம்ம வாகனம், 6ல், கிடா வாகனத்தில் சண்முக பெருமான் வீதியுலா வருகிறார். வரும், 7 காலை, 6:00 மணிக்கு திருவிளக்கு கூட்டு வழிபாடு, 36 முறை சஷ்டி பாராயணம், 9:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமிக்கு மகா அபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் காலை சீர்வரிசை வருதல், மாலை, திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.50ம் ஆண்டுஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று, 50ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மகா அபிேஷகத்துடன் தொடங்கியது. பின் சந்தன காப்புடன் ராஜ அலங்காரத்தில் பாலசுப்ரமணியர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். 7ல் சூரசம்ஹார விழா நடக்கிறது. அதேபோல், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சஷ்டி விழா தொடங்கியது.விரதம் தொடக்கம்ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடி முத்துக்குமாரசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. காலையில் மூலவர் முத்துக்குமாரசாமிக்கு பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்து, கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர். அதேபோல் ஆட்டையாம்பட்டி சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு, இரு கோவில்களிலும் தினமும் விதவித அலங்காரங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும், 7ல் நடக்க உள்ளது. மறுநாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.அதேபோல் காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும், 6ல் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.இரவு, 7:00 மணிக்கு கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார். நவ., 7 மதியம், 3:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கும். 8 காலை மயில் வாகனத்தில் கந்தசாமி காட்சியளிப்பார். மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு சப்பரத்தில் திருவீதி உலா நடக்கும். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ