முதலையை பிடிக்க வனத்துறை முயற்சி
ஒகேனக்கல், ஒகேனக்கல் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரியாற்றில் உள்ள மணல் திட்டு அருகே, முதலை இருந்தது. அதை பிடித்து, அங்குள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அடைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த, 2 நாட்களாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் முதலையை பிடிக்க கண்காணித்து வருகின்றனர்.