இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
சங்ககிரி: மகுடஞ்சாவடி அருகே வைகுந்தத்தை சேர்ந்த, சந்திரசேகர் மனைவி தமிழ்செல்வி. இவர், 2012 நவ., 19ல், கொண்டாலம்-பட்டி அருகே அரசு பஸ்சில் சென்றபோது, முன்புறம் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்தார். இது-குறித்து அவர் சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில், 2013ல் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிமன்றம், 2019ல், 7.35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, போக்குவரத்துக்கழகத்தக்கு உத்தரவிட்டது. ஆனால் அத்தொகையை செலுத்தா-ததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நிறைவேற்று மனுவை, 2022ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனால் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி புறப்படவிருந்த அரசு பஸ்சை, நீதிமன்ற அமீனா குணசே-கரன் தலைமையில் பணயாளர்கள் நேற்று ஜப்தி செய்தனர். பின் சங்ககிரி நீதிமன்றத்தில் பஸ்சை ஒப்படைத்தனர்.