வாழப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம்: வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடக்கிறது.வாழப்பாடி மின் செயற்பொறியாளர் முல்லை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாழப்பாடி கோட்டத்தில், அக்டோபர் மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (18ம் தேதி) காலை 11:00 மணிக்கு சிங்கிபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள வாழப்பாடி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வாழப்பாடி கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர், தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.