மேலும் செய்திகள்
சாராய வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்
26-Aug-2025
சேலம், சேலம் மாவட்டம் ஓமலுார், காமலாபுரத்தில், கடந்த ஆக., 8ல், 19,425 லிட்டர் எரிசாராயத்தை கடத்திய, கோவை, ஆனைமலை வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த அன்பழகன், 47, கேரள மாநிலம், பாலக்காடு, மீனாட்சிபுரத்தை சேர்ந்த பக்கீர் மொய்தீன், 54, ஆகியோரை, சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்துரைப்படி, அந்த இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்து, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார்.
26-Aug-2025