உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹூப்பள்ளி சிறப்பு ரயில்

ஹூப்பள்ளி சிறப்பு ரயில்

சேலம்:கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் நாளை காலை, 6:30க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். இந்த ரயில் சனிக்கிழமை தோறும் மார்ச், 30ம் தேதி வரை இயக்கப்படும்.அதேபோல, ராமேஸ்வரத்தில் ஜன., 7ம் தேதி இரவு, 9:00க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்பள்ளியை அடையும். இந்த ரயில் ஞாயிற்றுக் கிழமை தோறும் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படும்.இந்த ரயில் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை