உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காளியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காளியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இடைப்பாடி: பூலாம்பட்டி அருகே குப்பனுார் மாரியம்மன், சக்தி காளி-யம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 16ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று மாலை தீ மிதி விழா நடந்தது. அதில் ஏராளமான பக்-தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதை ஒட்டி குறவன் குறத்தி ஆட்டம், சுவாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேர் திருவிழாவையொட்டி, 5ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி