உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி

பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி

தாரமங்கலம்: தாரமங்கலத்தை சேர்ந்தவர் கலைவாணி, 56. இவரது கணவர் மாதேசன், 68, ஹோட்டலில் பணிபுரிந்தார். இவர் கடந்த, 7 மாலை, 6:00 மணிக்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தபோது, குடிநீர் பைப் தடுக்கி கீழே விழுந்தார். இதில், தலையில் அடிபட்டது. அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சையில் இருந்த மாதேசன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கலைவாணி புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு-பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை