உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமி மாயமான புகாரில் நடவடிக்கை இல்லை பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

சிறுமி மாயமான புகாரில் நடவடிக்கை இல்லை பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

வாழப்பாடி:வாழப்பாடி, கொட்டவாடியை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்துள்ளார். அவரை கடந்த, 25 காலை, முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.நேற்று காலை, 10:00 மணிக்கு, மகளிர் ஸ்டேஷனுக்கு சென்ற சிறுமியின் பெற்றோர், மகளை மீட்டுத்தரும்படியும், புகார் தொடர்பான நடவடிக்கை குறித்தும் கேட்டனர். அதற்கு போலீசார், அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.இதனால் மதியம், 2:45 மணிக்கு, கொட்டவாடி அரசு பள்ளி எதிரே, அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, சிறுமியின் பெற்றோர், உறவினர் கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, 'சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என உறுதி அளித்தனர். பின் மதியம், 3:00 மணிக்கு, அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சிறுமியுடன், பிளஸ் 2 படித்த, மற்றொரு சிறுமி தோழியாக இருந்தார். கடந்த, 25ல், அந்த தோழியுடன் சென்றதாக தெரிகிறது. இருவர் குறித்தும் விசாரிப்பதோடு, பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ