47ம் நாள் மண்டல பூஜை தென்னங்கன்று வழங்கல்
சங்ககிரி : சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில், கடந்த ஜூலை, 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. அதன், 47ம் நாளான நேற்று, வன்னிய சமுதாய மக்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.