ஆடு அடிக்கும் தொட்டி திட்டப்பணிக்கு பூஜை
ஆடு அடிக்கும் தொட்டிதிட்டப்பணிக்கு பூஜைமகுடஞ்சாவடி, அக். 1-இடங்கணசாலை நகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியில், ரூ.53 லட்சம் மதிப்பில் ஆடு அடிக்கும் தொட்டி அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் தளபதி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.