மின்கம்பி அறுந்து விழுந்து சினை பசு மாடு இறப்பு
தலைவாசல், தலைவாசல், சம்பேரியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 53. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மழை பெய்துகொண்டிருந்த நிலையில், சுப்ரமணியன் வீடு அருகே மின் கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து விழுந்தது. அப்போது வீடு முன் கட்டி வைத்திருந்த, 6 மாத சினை பசு மாடு மீது கம்பி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. பின் மின் இணைப்பு துண்டித்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.