உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணம் பறித்தவருக்கு காப்பு

பணம் பறித்தவருக்கு காப்பு

சேலம்:சேலம், மணியனுார், காளியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 32. கடந்த, 10ல், நெத்திமேடு குட்டியாபிள்ளை தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த, 3,200 ரூபாயை பறித்துச்சென்றனர். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, மணியனுார், வி.எம்.நகரை சேர்ந்த வைத்தீஸ்வரன், 42, என்பவரை கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி