உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு

127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு

தாரமங்கலம்,தாரமங்கலம் அருகே அரியாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 197 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக மணிவண்ணன்(பொ) உள்பட, 5 ஆசிரியர்கள், 3 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். மேலாண் குழு தலைவியாக உள்ள நதியா, தற்காலிக ஆசிரியராகவும் உள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலாண் குழுவினர், பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களின் 'டிசி' கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ஆசிரியர்கள் வந்த நிலையில், 54 மாணவ, மாணவியர் மட்டும் பள்ளிக்கு வந்தனர். மற்ற, 127 மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை