இறந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கல்
சேலம், அரியலுார், 'டான்செம்' நிறுவனத்தில் பணியாற்றிய, இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர் சதாம் உசேன், கடந்த, 2018ல் பணியின்போது மரணமடைந்தார். அவரது குடும்பத்துக்கு, வாழ்நாள் ஓய்வூதியமாக, மாதம், 5,328 ரூபாய் வழங்க, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இயக்குனர் சிவராமகிருஷ்ணன்(பொ) உத்தரவிட்டார். அதன்படி கடந்த, 2ல், சேலம் கிளை அலுவலகத்தில், அதன் மேலாளர் பிஸ்வஜித் தாஸ், உதவித்தொகையை வழங்க, சதாம் உசேனின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.