உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சத்துணவு ஊழியர்களால் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

சத்துணவு ஊழியர்களால் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

சேலம்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், 16வது மாவட்ட மாநாடு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, ஒய்.எம்.சி., ஹாலில் நேற்று நடந்தது. இதையொட்டி கோகுலநாதா பள்ளி அருகில் இருந்து மாநாடு நடக்கும் இடம் வரை, ஊர்வலம் நடந்தது. முன்னதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் அர்த்தனாரி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில், காலமுறை ஊதியம் வழங்குதல்; காலி பணியிடங்களை நிரப்புதல்; தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யும் அரசாணை, 95ஐ ரத்து செய்தல்; காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணைவு ஊழியர்களால் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலர் மலர்விழி, மாவட்ட தலைவர் லட்-சுமி, செயலர் அமராவதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை