உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சபரிமலை பக்தர்களுக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்களுக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம்: சபரிமலை பக்தர்களுக்காக, மேலும் இரு சிறப்பு ரயில்கள் கூடு-தலாக அறிவிக்கப்பட்டுள்ளன.மசூலிப்பட்டணம்-கொல்லம் சிறப்பு ரயில், நவ., 14, 21, 28, டிச., 26, ஜன., 2 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், மாலை 4:30 மணிக்கு கிளம்பி விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லம் சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு காலை, 8:30க்கும், ஈரோடுக்கு, 9:35 மணிக்கும் வந்து செல்லும்.மறு மார்க்க ரயிலான கொல்லம்-மசூலிப்பட்டணம் சிறப்பு ரயில், நவ., 16, 23, 30, டிச., 28, ஜன., 4 ஆகிய ஞாயிற்றுக்கிழ-மைகளில் அதிகாலை 2:30 மணிக்கு கிளம்பி, மறுநாள் காலை, 8:00 மணிக்கு ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணம் சென்ற-டையும். ஈரோடுக்கு மதியம், 1:15க்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 2:22 மணிக்கும் வந்து செல்லும்.நரசபூர்-கொல்லம் சிறப்பு ரயில், நவ., 16 முதல், ஜன., 18 வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லம் சென்ற-டையும். சேலம் ஜங்ஷனுக்கு காலை 8:30க்கும், ஈரோடுக்கு 9:35க்கும் வந்து செல்லும்.மறு மார்க்க ரயிலான கொல்லம்-நரசபூர் சிறப்பு ரயில், நவ., 18 முதல், ஜன., 20 வரை, செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 2:30 மணிக்கு கிளம்பி, மறுநாள் காலை, 7:00 மணிக்கு நரசபூர் சென்ற-டையும். ஈரோடுக்கு மதியம், 1:15 மணி, சேலம் ஜங்ஷனுக்கு, 2:22 மணிக்கு வந்து செல்லும்.இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிக்கையில் தெரி-வித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ