ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூர், மணக்காட்டை சேர்ந்த, மாரிமுத்து மகன் சின்ராசு, 23. பிளஸ் 2 முடித்துவிட்டு, ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்த, சேகர் மகள் திவ்யா, 19. தலைவாசல், வி.கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், 2ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலித்த நிலையில், இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த, 23ல், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டு, நேற்று, கெங்கவல்லி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் சின்ராசுவுடன், திவ்யாவை அனுப்பினர்.