1.60 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்ய இலக்கு
ஓமலுார், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில், 24 ஏக்கரில், அரசு தென்னை நாற்றுப்பண்ணை செயல்படுகிறது. அங்கு நாட்டு இனமான அரசம்பட்டி நெட்டை ரகம், அதிக மகசூல் தரக்கூடிய நெட்டை குட்டை ரகம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாகவும், தோட்டக்கலைத்துறை மூலமும் விற்கப்படுகிறது. அங்கு நடப்பு, 2025 - 26க்கு, 1.20 லட்சம் நெட்டை ரகம், 40,000 நெட்டை, குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது.இதுகுறித்து பண்ணை மேலாளர் ஸ்ரீவித்யா கூறியதாவது: தற்போது நாற்றுகள் பெறப்பட்டு, முதல் நிலை நாற்றங்கால்(மணல் பதனம்) பகுதியில் பராமரிக்கப்படுகிறது. ஒரு கன்று, 5 அல்லது 6 மாதங்களில் விற்பனைக்கு தயாராகிவிடும். பின் விற்பனை குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.