உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காருடன் புகையிலை பறிமுதல் ராஜஸ்தான் வாலிபருக்கு காப்பு

காருடன் புகையிலை பறிமுதல் ராஜஸ்தான் வாலிபருக்கு காப்பு

சேலம், சேலம், கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று காலை, அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'வென்ரா' காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.அப்போது சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை செய்ய, புகையிலை பண்டல்கள் இருந்தன. விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ராமராம், 23, என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு, புகையிலை கடத்த முயன்றதும் தெரிந்தது. 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புகையிலையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், ராமராமை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை