உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இயற்கையின் அதிசயம் பனிமூட்டம் இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்

இயற்கையின் அதிசயம் பனிமூட்டம் இதமாக ரசித்த சுற்றுலா பயணியர்

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கடந்த, 15ல் சுதந்திர தினத்தை ஒட்டி தொடர் விடு-முறையின் கடைசி நாளான நேற்று, ஏற்காட்டில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட்டுகள், பொட்டா-னிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்-ளிட்ட இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர். மதியம், 2:50 மணிக்கு சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து, 3:05 மணிக்கு ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்-தது. இதனால் ஏற்காடு முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தி-யது போன்று, அருகே உள்ளவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்-டது. வாகன ஓட்டிகள், மெதுவாகவே சென்றனர். ஏற்காடு, 'குளு-குளு' என மாறியது. இந்த இதமான சூழலை, சுற்றுலா பயணியர் மிகவும் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். முக்கிய-மாக படகு இல்லத்தில், சுற்றுலா பயணியர் மழையில் நனைந்தபடி, ஏரியை சூழ்ந்த பனிமூட்டத்தை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மாலையில் தொடர்ந்து, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ