இரு வீடுகளின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் திருட்டு
சேலம்: சேலத்தில், இரு வீடுகளின் பூட்டை உடைத்து, 9 பவுன் நகை திருடப்பட்டது.சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் கவிபிரசன்னா, 28. இவரது வீட்டின் பூட்டை உடைத்து, ஏழரை பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அம்மா-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கொண்டலாம்பட்டி அருகே, அமானிகொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன், 40. இவர் கடந்த, 23ல் வீட்டை பூட்டி விட்டு கோவை சென்றார். நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஒன்றரை பவுன் நகை, 1.25 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கொண்ட-லாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.