உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது

நங்கவள்ளி: நங்கவள்ளி, கோனுார் பூரல்கோட்டையில், அயோத்திதாஸ் பண்-டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்-குடியினர் மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க உத்தரவு பிறப்-பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பணி நிறுத்-தப்பட்டது. இதை கண்டித்து, வி.சி., கட்சியின், மேட்டூர் மாவட்ட செயலர் மெய்யழகன் தலைமையில் கட்சியினர் நேற்று காலை, நங்கவள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோரை, நங்கவள்ளி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை