மேலும் செய்திகள்
மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு
28-Nov-2024
மகுடஞ்சாவடி: -மகுடஞ்சாவடியில், தற்போது நடைபெறும் வாரச்சந்தையை இட-மாற்றம் செய்ய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சேலம்-கோவை பைபாஸ் சாலை, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலு-வலகம் செல்லும் வழியில், ஐயப்பன் கோவில் அருகே கடந்த ஐந்து ஆண்டுகளாக, வியாழன் தோறும் சந்தை இயங்கி வந்தது. காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், விவசாய இடுபொ-ருட்கள் என, 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த சந்தைக்கு வைகுந்தம், காளிப்பட்டி, காளி கவுண்டம்பா-ளையம், கூடலுார், கன்னந்தேரி, அ.புதுார், ஏகாபுரம், காகாபா-ளையம், வேம்படிதாளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வர்.இந்நிலையில் கடந்த, 2018ல், மகுடஞ்சாவடி பகுதியில் மேம்-பாலம் பணி ஆரம்பித்ததால் சந்தையை மகுடஞ்சாவடி சுப்ரம-ணியர் கோவில் செல்லும் வழியில், மிக குறுகலான இடத்தில் இடமாற்றம் செய்தனர். இதனால், இந்த பகுதி வழியாக ரயில்வே ஸ்டேஷன், வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்க-ளுக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சந்தையை மீண்டும் பழைய இடத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் செயல்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
28-Nov-2024