உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோ வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உதையாச்சி முருகன் மகன் அஜீத்குமார், 23. இவர், 2018ம் ஆண்டு நவ., 13ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுமியின் தாய் தேவகோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அஜீத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் வழக்கை விசாரித்து, அஜீத்குமாருக்கு 20 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி