உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்

தேவகோட்டை:தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில், செவிலியர் பலியானார்; டிரைவர் படுகாயமடைந்தார்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மாலா, 40, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக்கொண்டு, மதுரை தனியார் மருத்துவனையில் அனுமதித்து விட்டு, தேவகோட்டைக்கு திரும்பினார். ஆம்புலன்சை காரைக்குடி பெரியண்ணன், 45, ஓட்டினார். அதிகாலை, 4:00 மணியளவில் ஆம்புலன்ஸ் நாட்டரசன்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காளையார்கோவில் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில் சிக்கிய டிரைவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் பின்பகுதியில் சிக்கி பலியான மாலாவை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை