உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாழடைந்த அங்கன்வாடி கட்டடத்தை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு

பாழடைந்த அங்கன்வாடி கட்டடத்தை உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலை அரசு துவக்கப்பள்ளி வளாகம் உள்ளே பழைய அங்கன்வாடி கட்டடம் பாழடைந்து பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. இக்கட்டத்தை இடித்து அகற்ற பெற்றோர்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர்ஆஷா அஜித் இப்பள்ளியை ஆய்வு செய்தபோது இக்கட்டடம் குறித்து கலெக்டரின் பார்வைக்கு ஆசிரியர்கள் கொண்டு வந்தனர். உடனடியாக கட்டடத்தை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி