உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, : காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களை கண்டித்து சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அரசு விதிகளை மீறி போதிய நிதியில்லாத சூழலில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து உண்ணாவிரதம் இருந்தனர். இதை கண்டித்து சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.செயலாளர் ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், லுாயிஸ் பிரகாஷ், தனபால், கார்த்தி, இணை செயலாளர் மலர்விழி, மாநில செயற்குழு பயாஸ் அகமது பங்கேற்றனர். சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி, செயலாளர் முத்தையா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, அங்கன்வாடி சங்க மாநில துணை தலைவர் பாண்டி பேசினர். சங்க பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !