உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக மீட்பர் சர்ச்சில் நற்கருணை பவனி

உலக மீட்பர் சர்ச்சில் நற்கருணை பவனி

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர்உலக மீட்பர் சர்ச்சில் நவநாள் திருவிழா நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் திருவிழா திருப்பலியை பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் நடத்தினார். பாதிரியார் சேசு நீதியின் பொருட்டு துன்படுத்தப்படுவோர் பேறு பெற்றோர்என்ற தலைப்பில் மறையுரை ஆற்றினார். ஆலய வளாகத்தில் நற்கருணை பவனி நடந்தது. பவனியில் ராம்நகர், புளியால், திருவரங்கம், காரைக்குடி செக்காலை பங்கு பாதிரியார்கள், உதவி பங்கு பாதிரியார், ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, அப்போஸ்தலிக்க இல்ல இயக்குநர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை