உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அரசு விடுதி மாணவிக்கு தொந்தரவு: வாட்ச்மேன் கைது

காரைக்குடி அரசு விடுதி மாணவிக்கு தொந்தரவு: வாட்ச்மேன் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோவிலுாரைச் சேர்ந்த வாட்ச்மேன் அழகப்பனை 56, போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள கல்லுாரி அரசு மகளிர் விடுதியில் மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அந்த விடுதி வாட்ச்மேனாக அழகப்பன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி ஒருவர் விடுதியில் பாத்ரூம் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற அழகப்பன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இதுதொடர்பாக மாணவி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அழகப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி