உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவம் l குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வருமா

மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவம் l குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வருமா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலை, கொள்ளைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.பி., தலைமையில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட ஐந்து சப் டிவிஷன்களாக இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிஷன்கள் உள்ளன.ஜூனில் மட்டும் மதகுபட்டி நகை கடையில் கொள்ளை, காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு, காரைக்குடியில் டூவீலரில் சென்றவர்களிடம் அலைபேசி பறிப்பு காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2.67 லட்சம் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் நடந்தது.பனங்குடியில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு பிடித்ததில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொல்லங்குடி அருகே அண்ணன் தம்பியை வெட்டி படுகொலை செய்த சம்பவம். ஜூலை 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு மரக்கடை வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மதுபான கடை எதிரே ராஜபாண்டி என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டத்தில் தொடர் கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்துவருகிறது. எஸ்.பி., தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

In Itech Services AnbarasuStalin
ஜூலை 28, 2024 08:31

நேற்று பாஜக முக்கிய மாவட்டம் பொறுப்பில் உள்ளவர் கொலை. செங்கல் சூளை சிவகங்கை சாத்தாரசன் கோட்டை யில் கொலை நடைப்பெற்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை