உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 

சிவகங்கை,: நிலங்களை அளவீடு செய்ய இ- சேவை மையங்கள் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.சிவகங்கை மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்து வந்தனர். அங்கு நேரடியாக செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நில அளவை கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்வதற்கான தேதி அலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். இதற்கான சான்றினை https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி