உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சென்னையில் வேலுநாச்சியார் சிலை;  அரசுக்கு அறங்காவலர் நன்றி  

சென்னையில் வேலுநாச்சியார் சிலை;  அரசுக்கு அறங்காவலர் நன்றி  

சிவகங்கை: ராணி வேலுநாச்சியாருக்கு சென்னை தலைமை செயலகத்தில் சிலை நிறுவப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக காளையார்கோவிலில் மன்னர் சசிவர்ண முத்துவடுகநாத தேவர் குருபூஜை விழாவில், தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் பேசினார்.சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று காலை மாரத்தான் ஓட்டத்தை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் துவக்கி வைத்தார்.காளையார்கோவிலில் உள்ள மன்னர் நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெற்றது.பெண்கள் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன் பிருந்து பால்குடம் எடுத்து மன்னருக்கு அபிேஷகம் செய்தனர். பரம்பரை அறங்காவலர் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, மன்னர் கல்வி நிறுவன செயலர் குமரகுரு, சத்திர மேலாளர் பூசை, கண்காணிப்பாளர் பாலசரவணன், சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்று வழங்கினர். விழாவில் வேலுநாச்சியார் அறக்கட்டளை செயலாளர் மணிமுத்து வரவேற்றார். தி.மு.க., தீர்மானக்குழு மாநில செயலாளர் அக்ரிகணேசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவாஜி, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட அமைப்பாளர் ராமசந்திர தேவர், மறவமங்கலம் ஊராட்சி தலைவர் அன்பழகன், மறவர் சங்க ஒருங்கிணைப்பாளர் போஸ், செயலாளர் சேதுபதி, உறுப்பினர்கள் உதயகுமார், கார்த்திகைசாமி, தேவஸ்தான கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், சரவணகணேஷ், வேல்முருகன், கணபதிராம் பங்கேற்றனர்.

முதல்வருக்கு நன்றி

பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் பேசியதாவது: ராணி வேலுநாச்சியாருக்கு சென்னை தலைமை செயலகத்தில் சிலை நிறுவப்படும் என சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.மன்னர் சசிவர்ண முத்துவடுகநாத தேவர் குருபூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும் என அறக்கட்டளை சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். முத்துவடுகநாத பேரவை தலைவர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை