உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் 4000 ஏக்கரில் தோட்டப்பயிர்கள் சாகுபடி நடக்கிறது. மானாவாரி பயிராகவே பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தொடர்ந்து போதிய மழை இல்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில் கிணறு, போர்வெல் வசதியுள்ளவர்கள் நீரை சிக்கனத்துடன் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க தோட்டக்கலைத்துறையினர் நுண்ணீர்ப் பாசனம் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். தோட்டக்கலை உதவி இயக்குநர் விநோதினி அறிவித்துள்ளதாவது: பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தெளிப்பு நீர்,சொட்டு நீர் பாசனம் ஆகிய 2 முறைகள் உள்ளன. பயிருக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நீர் எளிதாக வேருக்கு செல்லும், உரமிடுதலையும் எளிதாக்குகிறது. மேலும் களைகளை கட்டுப்படுத்துவதும் எளிதானது. சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். சொட்டுநீர் பாசனம் அமைத்திருந்தால் 7 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் மானியத்தில் அமைக்க முடியும். தெளிப்பு நீர் பாசனம் அமைத்தவர்கள் சொட்டு நீர்பாசனம் அமைக்க விரும்பினால் 3 ஆண்டு கழித்து முன்பு பெற்ற மான்யத்தை கழித்து மீதமுள்ள மான்யத்தில் அமைக்கலாம். பயன் பெற விரும்பும் விவசாயிகள் ஆதார், ரேஷன் அட்டை, போட்டோ, சிட்டா, அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகம், சிறுகுறு விவசாயி சான்று ஆகியவற்றுடன் திருப்புத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !