உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

சிவகங்கை :சிவகங்கை அருகே மாடக்கோட்டையில் போலீஸ் ரோந்தின் போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிவகங்கை தாலுகா போலீசார் மாடக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆளில்லாத பழைய கட்டடத்தில் 3 பேர் பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 பேர் தப்பிக்க முயற்சித்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் கீழக்குளம் தவம் என்ற முத்துராமலிங்கம் 40, கீழவாணியங்குடி மணிஷ் 20, கரும்பாவூர் பாண்டிசெல்வம் 23 என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். தப்பிக்க முயன்ற பாண்டிசெல்வத்திற்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. போலீசார் பாண்டிசெல்வத்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை