மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 3928 பேர் ஆப்சென்ட்
29-Sep-2025
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்த 8,749 பேரகளில் 6,727 பேர் பங்கேற்றநிலையில் 2,023 பேர் ஆப்சென்ட் ஆகினர். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கென இம்மாவட்ட அளவில் 8,749 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய மூன்று இடங்களில் ஏற்படுத்தப்பட்ட 30 தேர்வு மையங்களில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமையில் வருவாய்துறையினர் தேர்வினை கண்காணித்தனர். நேற்றைய தேர்வில் 6,727 பேர் மட்டுமே (77 சதவீதம்) பங்கேற்ற நிலையில் 2,203 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
29-Sep-2025