உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் எஸ்கேப்

68 வயது மனைவி கொலை; 75 வயது கணவர் எஸ்கேப்

மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் குடும்பத்தகராறில் 68 வயது மனைவியை வெட்டிக்கொன்ற 75 வயது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 8:30 மணிக்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து முருகன் மனைவி மூக்கம்மாளை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்த மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பலியானார். முருகனை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை