உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்

 உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்

மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் மகா வேள்வி யாகம் நடைபெற்றது. இக்கோயிலில் வருடம் தோறும் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மகா வேள்வி யாகம் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான மகா வேள்வி யாகம் மாயாண்டி சுவாமி சன்னிதானம் முன்பாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பனையபட்டி செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தர்கள் வழியில் தமிழ் முறைப்படி மகா வேள்வி யாகம் நடைபெற்றது. சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், குங்குமம், திரவியம், நெய் உள்ளிட்ட 18 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. கருப்பனேந்தல் மட நிர்வாகிகள், கட்டிக்குளம் கிராம மக்கள் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ