உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அகலமில்லாத சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்

அகலமில்லாத சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அகலம் குறைவான சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.இவ்வொன்றியத்தில் மருதிப்பட்டியில் இருந்து சூரக்குடி செல்லும் சாலையில் சில இடங்களில் அகலம் குறுகியதாக உள்ளது. ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு அகலப்படுத்தப்படாமல் உள்ளது.இச்சாலை வழியாகத்தான் பொன்னமராவதியில் இருந்து மருதிப்பட்டி வழியாக மதுரை செல்லும் பேருந்துகளும், கனரக வாகனங்களும் சென்று வருகிறது. சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.குறிப்பாக முறையூர் பாலம் அருகே விபத்துக்கள் நடக்கிறது. இரவில் டூவீலரில் வருபவர்கள் பலர் விழுந்து காயமடைந்துள்ளனர்.இச்சாலையை விரைந்து அகலப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 11, 2025 09:02

விரிவான சாலைகளில் அளவு குறைவாக சிமெண்ட் ரோடு போட்டு விட்டு சாலையின் முழு அளவும் போட்டதாக கணக்கு காட்டும் கள்ள அதிகாரிகள் கையூட்டு பெறும் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளா ஆட்சியாளர்கள் இருக்கும் வரை சாலைகளின் அகலம் நீளம் குறைதல் மட்டுமல்ல வீதிகளே மறையும்விதத்தில் ஆக்கிரமிப்புகள் தாண்டவமாடுகின்றன கண்டுகொள்ளுவார் மற்றும் கண்டிப்போர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோர் எவருமே இல்லாததால் சாலைகள் பொதுஇடங்கள் குறுகிவிட்டன பல காணாமலே போய்விட்டன பத்திரிகைகள் முன்கூட்டியே பிரசுரித்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடைபெறாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை