மேலும் செய்திகள்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
13-Nov-2024
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.பாண்டி துவக்க உரை ஆற்றினார். மாவட்ட நிதி காப்பாளர் நடராஜன் கோரிக்கையை விளக்கினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்ட நிறைவுரை ஆற்றினர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ராமானுஜம் நன்றி கூறினார்.
13-Nov-2024