உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெற்றி பெற்ற 1,065 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து, நகராட்சி தலைவர் துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், வடிவேல், செந்தில்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ