விழிப்புணர்வு கூட்டம்
மானாமதுரை: மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்ததுஆசிரியர் கழக தலைவர் காசிராஜன்,எஸ்.எம். சி., தலைவர் ராஜாத்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை,குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ராஜேஸ்வரி, சமூகப் பணியாளர் சத்தியமூர்த்தி பேசினர்.