உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இக்கோயில் பூப்பல்லக்கு உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று வீரையா கோவில் இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சிங்கம்புணரி -- மேலூர் ரோட்டில் பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடந்ததில், 40 வண்டிகள் வரை பங்கேற்றன. இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர், சாரதிக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ