உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி   கலெக்டர் தகவல்  

சிவகங்கையில் பள்ளி, கல்லுாரி  மாணவர்களுக்கு பேச்சு போட்டி   கலெக்டர் தகவல்  

சிவகங்கை : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜன.,21 மற்றும் 22ல் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அரங்கில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்டஅளவில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜன., 21 அன்றும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி ஜன.,22 ல் நடைபெறும்.மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லுாரிக்கும் தலா 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் மூலமாக ஜன.,17 மாலை 4:00 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக 2ம் மேல்தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவோ, tamil gmail.comமுகவரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரத்திற்கு 04575 --- 241 487ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி