உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தீவிர சிசு சிகிச்சை கட்டட திறப்பு தாமதம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் தீவிர சிசு சிகிச்சை கட்டட திறப்பு தாமதம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் பேறுகால அவசரே சிகிச்சை சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கைகள் உள்ளன. இதில் கர்ப்பிணிகளுக்கு 180 படுக்கைகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன.கடந்த ஆண்டு மட்டும் 4460 பிரசவம் நடந்துள்ளது. இதில் 4553 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவக் கல்லுாரி துவங்கியதில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதியில்லாததால் கூடுதல் படுக்கை வசதியுடன் மகப்பேறு பிரிவு கேட்டு நீண்ட நாட்களாக மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதன் பெயரில் கடந்த ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில் 100படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு பணியானது முழுமையாக முடிந்துள்ளது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் சிவகங்கை வருவதையொட்டி இந்த புதிய கட்டடம் திறக்கப்படும் என டாக்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் கட்டடம் திறப்பதில் தாமதம் ஏற்படும் என மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இடநெருக்கடியை தவிர்க்க கட்டி முடிக்கப்பட்ட பேறுகால அவசரசிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடத்திற்கு விரைவில் மின் இணைப்பு கொடுத்து கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை