போக்சோவில் டிரைவர் கைது
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார் டிரைவர் வேல்முருகன் 45, கைது செய்யப்பட்டார்.தேவகோட்டை அருகே செலுகை மேலக்குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தேவகோட்டையைச் சேர்ந்த ஒருவரது காருக்கு ஆக்டிங் டிரைவராக பணி புரிந்தார். அங்கு வேலைக்கு சென்ற போது 4 வயது சிறுமியை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். தேவகோட்டை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, போக்சோ வழக்கில் டிரைவரை கைது செய்தார்.