உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்

மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்

மானாமதுரை : மானாமதுரையில் நேற்று காலை 8:00 மணிவரை வரை நீடித்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 8:00 மணி வரை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த மூடுபனியால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ